தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பாக பூமி தினம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் திருச்சி சார்பில் பூமி தினத்தை (22.04.2025) முன்னிட்டு கோகிலாபுரம் குறுங்காட்டில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. நிகழ்வுக்கு கம்பம் நேதாஜி அறக்கட்டளை நிறுவனர் சோ. பஞ்சு ராஜா தலைமை தாங்கினார். ஆலிலை குடும்பத்தார் மணிமாறன், நாகேந்திரன், நிருபன், சுதர்சனா, வாணி, சத்யா, மற்றும் கல்லூரி மாணவிகள் இப்சிதா மகந்தா, ஜெயஸ்ரீ, காஞ்சனா, கரணிப் பிரியா, கனிஷ்கா, காவியா ஸ்ரீ, கீர்த்தி, நல்லி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Read More

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழா மே 6ல் தொடங்குகிறது

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவிற்கான கம்பம் நடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சித்திரை திருவிழா மே 6ல் துவங்கி மே 13வரை எட்டு நாட்கள் நடைபெற உள்ளது. வீரபாண்டி கௌமாரியம்மன் பிரசித்தி பெற்ற தலமாகும். இக்கோயில் சித்திரை விழாவிற்கு தென் மாவட்ட அளவிலும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். சித்திரை திருவிழாவை முன்னிட்டு அம்மன் உத்தரவில் கம்பம் தேர்வு செய்து கண்ணீஸ்வர முடையார் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று கம்பம் மற்றும் கரகம்…

Read More

கம்பம் ஸ்ரீகௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா தொடங்கியது

அருள்மிகு கம்பம் கௌமாரியம்மன் சித்திரை திருவிழா இன்று ஏப்ரல் 16 புதன்கிழமை தொடங்கியது. அதை முன்னிட்டு கம்பம் கம்பராயப் பெருமாள் திருக்கோயில் வளாகத்தில் இருந்து அம்மன் புறப்பாடு நடைபெற்று கம்பம் கௌமாரியம்மன் திருக்கோவிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Read More